February 23 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   படவேடு

  1. அருள்மிகு யோகராமர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     யோக ராமச்சந்திரர்

உற்சவர்        :     கோதண்டராமர்

தாயார்          :     செண்பகவல்லி

தல விருட்சம்   :     செண்பகமரம்

புராண பெயர்    :     செண்பகாரண்யம்

ஊர்            :     படவேடு

மாவட்டம்       :     திருவண்ணாமலை

 

ஸ்தல வரலாறு:

உலகத்தின் தோற்றம் மற்றும் அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது வேதங்கள் ஆகும். இத்தகைய வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன? என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தனக்கு சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், ராமபிரானை வேண்டினார். சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, “”எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்’ என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு, “யோக ராமச்சந்திரமூர்த்தி’ என்ற பெயர் ஏற்பட்டது.

யோகராமச்சந்திரமூர்த்தியை ஆஞ்சநேயர்  குருவாய் பெற்றதாலேயே. மிகுந்த ஞானம், கூரிய நுண்ணறிவு, வேகமாக சரியாகச் செயல்படுதல், மாறாத பிரம்மச்சாரியம், சத்யம் போன்ற சீரிய பண்புகள் நிறைந்து ஒழுக்கங்களையும்  ஒருங்கே அமைப்பெற்றார்

 

கோயில் சிறப்புகள்:

  • ஆஞ்சநேயருக்கு சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் ஆச்சாரியனாய் இருந்து உபதேசிக்கும்  குரு அம்சமாய்  கோலம் கொண்டு கல்வி விருத்திக்கும் ஆரோக்ய மேம்பாட்டுக்கும் ஒருசேர ஞானமொடு சேர்க்க யோக  ராமச்சந்திர மூர்த்தியாக அருள்கிறார் இங்கு இராம பிரான்.

 

  • ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், சீதாபிராட்டியுடன் அமர்ந்து வீராசனத்தில் , சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கும் அரிய அமைப்பில் அருள்கிறார்..

 

  • இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.

 

  • ராமர்-சீதை மூர்த்திக்கு அருகில் ஆஞ்சநேயரும் அமர்ந்த நிலையில் கையில் ஓலைச்சுவடியைத் தாங்கி நிற்பது சிறப்பு

 

  • இக்கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சீதையைத் தவிர, செண்பகவல்லித்தாயாருக்கும் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு “தானே பரமாத்மா’ என்று உணர்த்தியதால் இவர், பெருமாளின் அம்சமாகிறார். இதை உணர்த்தும் விதமாக இங்கு தாயாருக்கு சன்னதி எழுப்பியுள்ளனர்.

 

  • வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோயில் இது

 

  • பவுர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகள் மற்றும் புனர்பூச நாட்களில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். ஆவணி இரண்டாம் வெள்ளியன்று ராமர், சீதை, லட்சுமணருடன் கருட சேவை காட்சி தருவார். மாசி மகத்தன்று கோதண்டராமர், இங்கிருந்து மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி கண்டு திரும்புவார். பங்குனியில் நடக்கும் ராமநவமி விழாவில், உத்திரத்தன்று சுவாமி திருக்கல்யாணம் நடக்கும்.

 

  • கோயிலுக்கு நேரே வெளியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர் உள்ளனர். பிரகாரத்தில் வேணுகோபாலர், பரசுராமர், ஆஞ்சநேயர் உள்ளனர்

 

  • வால்மீகி மகரிஷி உள்ளிட்ட சப்தரிஷிகளும் பல்வேறு சித்தர்களும் நாரத மகரிஷியும் பிரம்மதேவரும் கொங்கணர். கோரக்கரும் பிருகு மகரிஷியும். தொழுது பேறுபெற்ற புண்ணிய ஆலயம் இது.

 

  • ஆவணி மாதத்தில் இரண்டாம் வெள்ளிக்கிழமை, இன்றும் வால்மீகி மகரிஷி, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் முதலான பல சித்தர் பெருமக்களுடன் தசரத சக்ரவர்த்தி அரூபமாக திருக்கோயிலுக்கு எழுந்தருளி ராமச்சந்திரமூர்த்தி, தன் நாச்சியார் சீதாபிராட்டியுடனும் இளைய பெருமாள் லட்சுமணருடனும் கருடன் மேல் எழுந்தருளும் காட்சியைக் கண்டு தொழுது இன்புறுகின்றனர்.

 

 

திருவிழா: 

ஆவணி வெள்ளியில் கருடசேவை, மாசி மகம், ராமநவமி, பவுர்ணமி, அமாவாசை

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை,

மாலை மணி 3 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு யோகராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில்,

படவேடு – 606 905.

திருவண்ணாலை மாவட்டம்.

 

போன்:    

+91 4181-248 224, 94435 40660

 

அமைவிடம்:

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் 48 கி.மீ., (வேலூரில் இருந்து 32 கி.மீ.,) தூரத்திலுள்ள சந்தவாசல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., சென்றால் படைவேடு செல்லலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

ten + sixteen =