திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!!

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!! பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.03.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி……

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! – அன்னம் with ஆண்டாள்! தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.01.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி… “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!! காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!! தேகத்தின் ரசனையை […]

திருப்பாவை பாடல் 29:

திருப்பாவை பாடல் 29 (ஆட்செய்வோம் எனல்) சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள் : விடியற்காலையில் வந்து உன்னை வழிபட்டு உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தை கேட்பாயாக ! பசுக்களை மேய்த்து […]

திருப்பாவை பாடல் 28:

திருப்பாவை பாடல் 28: கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் […]

திருப்பாவை பாடல் 27:

திருப்பாவை பாடல் 27: (மகிழ்ச்சி கொளல்) கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : பகைவரை வெல்லும் சிறப்பு உடைய கோவிந்தா! உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து வேண்டும் பறை கொள்வோம். அதற்கு மேலும் யாம் […]

திருப்பாவை பாடல் 26:

திருப்பாவை பாடல் 26: (வேண்டுவன இவை எனல்) மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். விளக்கம் : திருமாலே! மணிவண்ணனே! ஆலிலை மேல் பள்ளிகொள்பவனே! மார்கழி மாதம் நீராடுவதற்காக மேன்மை பொருந்திய அடியவர்கள் செய்யும் செயல்பாடுகளை செய்ய எமக்கு […]

திருப்பாவை பாடல் 25:

திருப்பாவை பாடல் 25: (பறை தருக எனல்) ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : தேவகி மகனாக பிறந்தாய்… அதே இரவில் யசோதை மகனாக ஒளித்து வளர்ந்தாய். கண்ணன் மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் […]

திருப்பாவை பாடல் 24:

திருப்பாவை பாடல் 24 (புகழ் மாலை) அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். விளக்கம் : திரி விக்கிரமனாய் அவதரித்து மூவுலகையும் தன் சேவடியால் அளந்த பிரானே, உன் பாதம் போற்றி போற்றி…! […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by