பழனியப்பர் திருக்கோவில்: 

பழனியப்பர் திருக்கோவில்:  மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும் வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும் இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் #பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது. மூலவர் : பழனியாண்டவர். தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். ஊர் : பேளுக்குறிச்சி. மாவட்டம் : நாமக்கல். தல வரலாறு […]

மோகனூர் நாவலடியன் திருக்கோயில்

மோகனூர் நாவலடியன் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மற்றும் நாவலடியன் திருக்கோயில்கள் புதிய ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவில்  கொங்குவெள்ளாளர் சமூகத்தின் மணியன் குலம்  மற்றும்  கண்ணந்த குல குடிப்பாட்டு மக்களுடைய குல தெய்வமாகும். அண்ணன் முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பர்களுடன் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கொங்கு மக்களின் ஆதி சிவன் கோவிலான இந்த கோவிலை வெள்ளி, […]

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்:

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் வாசுதேவநல்லூர். இங்கு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சிவன் பாதி அம்பாள் பாதியாக அருள் வழங்கும் சிந்தாமணிநாதர் என்னும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்). அம்மன் : இடபாகவல்லி. தல விருட்சம் : புளி. தீர்த்தம் : கருப்பை நதி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். தல வரலாறு:  பிருங்கி என்பவர் சிவம் வேறு சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி […]

முத்தாலம்மன் திருக்கோவில்:

முத்தாலம்மன் திருக்கோவில்: பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது. மூலவர் : முத்தாலம்மன் உற்சவர் : கிளி ஏந்திய முத்தாலம்மன் தல விருட்சம் : அரசு பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் தல வரலாறு : வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் விஜயநகரப்பேரரசு காலத்தில் தென்திசைக்கு வந்தார். அப்போது தான் தினமும் வணங்கி வந்த […]

வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்

வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்: பாலைய நாடான காரைக்குடியில் அரசர்களுக்கு படைவீரர்களாக இருந்த வல்லம்பர் தங்கள் குலதெய்வமாக பெரியநாயகியை ஏற்றனர். மூலஸ்தானத்தில் வயநாச்சி அம்மன் அருள்பாலிக்கும் இத்திருக்கோவில் ஏ.வேலங்குடி ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ளது. பெயர் : அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். மூலவர் : வயநாச்சி மற்றும் பெரியநாயகி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : ஏ.வேலங்குடி. மாவட்டம் : சிவகங்கை. தல வரலாறு : […]

காத்தாயி அம்மன் கோவில்:

காத்தாயி அம்மன் கோவில்:    காத்தாயி அம்மன் நாட்டுப்புறத் தெய்வமாகும்.இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக காட்சியளிக்கிறாள். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ளது. மூலவர் : குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை பூங்குறத்தியம்மை. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : காட்டுமன்னார் கோவில். மாவட்டம் : கடலூர். தல வரலாறு : […]

பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்:

பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்: முருகனுக்குப் பின்புறம் கருவறைச் சுவரை ஒட்டி அனந்த சயனக் கோலத்தில் இருப்பதைப் போன்று பெருமாளின் சுயம்பு திருமேனி காணப்படும். அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நீலகிரி மாவட்டம் #எல்க் மலை பகுதியில் அமைந்துள்ளது. இறைவன் : பாலதண்டாயுதபாணி ஜலகண்டேசவரர். இறைவி : ஜலகண்டீஸ்வரி. தல மரம் : செண்பக மரம். தீர்த்தம் : நீலநாரயணதீர்த்தம். புராண பெயர் : மான்குன்றம். கிராமம்ஃநகரம் : எல்க் மலை. மாவட்டம் : நீலகிரி. […]

தியாகராஜர் கோயில்:

தியாகராஜர் கோயில்: தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். தல […]

புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:

புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:   புண்ணியகோடியப்பர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு சிவத்தலமாகும்.  #திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது. மூலவர் : புண்ணியகோடியப்பர். உற்சவர் : திருவிடைவாயப்பர். அம்மன் : அபிராமி. தல விருட்சம் : கஸ்தூரி அரளி. தீர்த்தம் : ஸ்ரீதீர்த்தம். ஆகமம் : சிவாகமம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். […]

சிவபுரி உச்சிநாதர் கோயில்:

சிவபுரி உச்சிநாதர் கோயில் உச்சிநாதர் கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும்.  இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும்.  அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது.  அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார்.  இக்கோயிலின் #அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by