June 05 2018 0Comment

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்:

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்:

காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்தாக உள்ளது.

மூலவர் – வனபத்ர காளியம்மன்

தல விருட்சம் – தொரத்திமரம்

தீர்த்தம் – பவானி தீர்த்தம்

தல வரலாறு :

சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள்.

அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால் இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது.

இது தவிர ஆரவல்லி, சூரவல்லி கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார்.

பின்பு பாண்டவர்கள் அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.

அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் சென்று ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடுபொடியாக்க அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை #அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர்.

இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான்.

நடந்த விஷயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான்.

வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான்.

தலச் சிறப்பு :

வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும்.

ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.

ஆடிக்குண்டம் இறங்க அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று 36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும்.

புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள் திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள் சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம்.

குண்டமிறங்கல் எனும் தீமிதித்தல் வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர்.

தங்கம்,வெள்ளி பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக வழங்குவது வழக்கமாக உள்ளது.

இது தவிர கிடா வெட்டுதல்தான் இங்கு தனிச் சிறப்பு.

Share this:

Write a Reply or Comment

seventeen + 7 =