October 18 2018 0Comment

மின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு

அக்டோபர் 14 2018 அன்று…
  
நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி….
பத்திரிகையில் பெயர் போடவில்லை என்றாலும் பெருந்தன்மையாக இந்து மக்களின் எழுச்சியை காண  எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களுக்கும் அவர்களுடன் வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களுக்கும் ஆண்டாள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹிந்து மாநாட்டிற்கு வருகை தந்த முதல் தமிழக அமைச்சர் என்கின்ற பெருமையும் இவருக்கே இதன் மூலம்  கிடைத்துள்ளது
விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் பெருமகனாருக்கும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருக்கும் காமராஜர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் கனகராஜ் அண்ணன் அவர்களும் மோகனூர் முருகேசன் அண்ணன் அவர்களும் மரியாதை செய்த போது எடுத்த படங்கள்.
உடன் திரு.இல.கணேசன் அய்யா, திரு.ரவிக்குமார் அய்யா, திரு.கல்யாண்ஜி, முன்னாள் தமிழக DGP திரு.பாலச்சந்திரன் IPS  மற்றும் விழா குழுத் தலைவர்  ஆண்டாள் வாஸ்து திரு.கருணாஸ் கார்த்திக் அவர்கள்.
பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்த  இருவரும் வரும் காலங்களிலும் சந்தோஷமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ ஆண்டாள் துணை நிற்க வேண்டும்.
நன்றி… நன்றி… நன்றி….
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

one + nineteen =