பச்சை பரப்புதல் வைபவம்…

ஸ்ரீ

பச்சை பரப்புதல் நிகழ்ச்சி

பகல் பத்து முதல் நாளான கார்த்திகை 25, வெள்ளிக்கிழமை (11-12-2015) அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டாள் ரங்கமன்னாருடன் மூலஸ்தானத்திலிருந்து பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும். இது ஒரு அரிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

seven + 15 =