“சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவு…”

Vastu - Columbusகொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிப்பதற்காக.. இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார்..!!

பல நாட்கள் ஆகியும்.. கரை எதுவும் தென்பட வில்லை..!!

இருபது நாட்கள் கடந்த நிலையில்.. இன்னும் இருபது நாட்களுக்கு தான் உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பஸிடம்…

“இப்போது திரும்பினால்.. எந்த பிரச்சினை இல்லாமல் ஊர் சென்று விடலாம்..!! இன்னும் இருபது நாளைக்கு தேவையான உணவு தான் இருக்கிறது.. மேற்கொண்டு நாம் சென்று கரை எதுவும் தென்படா விட்டால்.. வீணாக கடலில் நாம் உயிர் விட வேண்டும்..!!” என்றனர்..!!

ஆனால் கொலம்பஸ்…

“முன் வைத்த காலைப் பின் நோக்கி வைக்க தான் தயாராக இல்லை.. நமது பாதை முன் நோக்கியே தவிர.. பின் நோக்கி அல்ல..!!” என்பதில் உறுதியாக இருந்தார்..!!

ஆனால் கொலம்பஸின் பேச்சை கேட்டால்.. கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி.. கொலம்பசுக்கு எதிராக திரும்பினர்.. மாலுமிகள்..!! கப்பலின் பொறுப்பை கையிலெடுக்க தீர்மானித்தனர்..!!

அப்போது கொலம்பஸ்.. ஒரு முக்கியமான முடிவு எடுத்தார்.. மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்..!!

பிறகு மாலுமிகளிடம்…

“நண்பர்களே உங்கள் கவலை எனக்கு புரிகிறது..!! இருபது பேருக்கு.. இருபது நாளைக்கு தேவையான உணவு இருக்கிறது..!! இதில் ஒருவர் குறைந்தால்.. கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும்..!! எனவே இன்னும் ஒரு நாளைக்கு கப்பலை முன் நோக்கி செலுத்துங்கள்..!! அதற்குள் கரை தென்படா விட்டால்.. என்னை கொன்று விட்டு திரும்புங்கள்..!! அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும் வரை.. உணவு சரியாக இருக்கும்..!!” என்றார்..!!

கொலம்பஸ் இவ்வாறு சொன்னதும்.. மற்றவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.. ஒன்றும் சொல்லாது.. கப்பலை முன் நோக்கி செலுத்தினர்..!!

அடுத்த சில மணி நேரத்தில்.. கரை தென்பட்டதும்.. எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை..!!!

இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்கு.. கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவு தான் காரணம்..!!!

 

Courtesy: Information Today

Share this:

Write a Reply or Comment

12 − three =