கடிதம் – 34 – AB – யும் CD – யும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

Vastu - Positive Thought 1வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான்.

அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான்

ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

  1. யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்?
  2. யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்?
  3. யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்?
  4. யாருக்கு பயம் மட்டுமே அதிகமாக இருக்கும்?

பதில்:

வாழ்க்கையை பற்றி சிந்திக்காதவர்களுக்கு,

வாழ்க்கையை எதிர்கொள்ள தயங்குபவர்களுக்கு,

வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு,

வாழ்க்கையின் யதார்த்தத்தை ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு

மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளும் இருக்கும்.

எப்படி வயிற்றுக்கு கொஞ்சம் உணவு எடுத்து கொள்ளும் போது மொத்த உடலும் சுறுசுறுப்படைகின்றதோ, அதுபோல் ஒரே ஒரு விஷயத்தை செய்தால் இந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று சொல்வேன்.

அது என்ன விஷயம்:-

அந்த விஷயம் தான் AB – CD.

AB – என்றால் Any Body (யார் வேண்டுமானாலும்)

CD – என்றால் Can Dream (கனவு காணலாம்)

A.B.C.D – Any Body Can Dream – யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்.

நம் எல்லா தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமே நாம் யாரும் கனவு காணாமல் பழியை விதி மேல் போட்டுவிட்டு சும்மா இருப்பது தான்.

எவன் ஒருவன் கனவை துல்லியமாக காண்கின்றானோ, அவன் அவன் இலக்கை சரியான நேரத்தில் மிகச் சரியாக, மிகத்துல்லியமாக அடைவான். ஒரு வேலையை மிக உன்னிப்பாக, பொறுமையாக ஒருவர் செய்யும் போது, அவருடைய Breathing Pattern(சுவாச முறை) – ஐ கவனித்தால் அவர் விடும் மூச்சு நீண்ட மூச்சாகவும் இருக்கும். குறைவான மூச்சளவாகவும் இருக்கும்.

இந்த அடிப்படையில் ஒருவர் ஒரு விஷயத்தை அடைய சதா கனவு கண்டு, அந்த விஷயத்தையே தொடர்ந்து சிந்தித்து அந்த விஷயமாகவே அவர் மாறும் போது அவரின் மூச்சளவு குறைந்து, அவர் இயற்கையாகவே ஆல்பாவிற்கு அடுத்த நிலையான தீட்டா நிலைக்கு போய் விடுவார். இந்த நிலைக்கு போகும் போது ஒருவருக்கு அவரை அறியாமலே பயம் இல்லாமல் போய்விடும்; நேர்மறை சிந்தனைகள் தானாக வந்து சேர்ந்துவிடும். நேர் நம்பிக்கை மட்டுமே நிரம்பி இருக்கும். மேலும் மூச்சின் அளவு குறையும் போது விஷயங்களை அணுகும் முறையே ஒட்டுமொத்தமாக மாறிவிடுகின்றது. உதாரணத்திற்கு ஒரு சிறிய விஷயம்:-

நம்மில் அனேகம் பேர் இன்று Computer உபயோகப்படுத்துகின்றோம். நாம் உபயோகப்படுத்தும் Computer Key board – ல் ஆங்கில எழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் இப்படி தான் இருக்கும்.

q w e r t y u i o p

a s d f g h j k l

z x c v b n m

என்றாவது ஒரு நாள் உங்களில் யாராவது ஏன் இந்த ஆங்கில எழுத்துக்கள் அதன் வரிசையில் இல்லாமல், மேற்சொன்ன வித்தியாசமான வரிசையில் உள்ளது என்று யோசித்து இருக்கிறீர்களா? யோசித்தும் இருக்கலாம். யோசித்தவர்கள் அது நாம் Type செய்யும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக தான் என்று மேலோட்டமாக முடிவெடுத்து இன்று வரை Type செய்து கொண்டிருப்பார்கள்.

அந்த முடிவு சரியா?

உண்மையாக பார்த்தோமேயானால் பழைய கால typewriter – களை மிகுந்த வேகத்துடன் ஒருவர் உபயோகப்படுத்தினால், அந்த typewriter – களின் பாகங்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கி பழுதாகி நின்று விடும் என்பதால் type அடிப்பவரின் வேகத்தை மட்டுபடுத்த, கட்டுபடுத்த மேற்சொன்ன வரிசைப்படி ஆங்கில சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தெரியாமல் / தெரிந்து கொள்ள முற்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் நாமாக இல்லாமல். அவசர உலகில் மூச்சை அதிகப்படுத்தி, பேச்சையும் மிக அதிகப்படுத்தி மனித ஆடுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மூச்சை கட்டுப்படுத்தி சரியான முறையில் கனவு கண்டால் இது போல் எல்லா விஷயங்களிலும் பொதிந்துள்ள சிதம்பர ரகசியம் இருக்கும் இடத்தில் இருந்தே தெரியும். புரியவும் செய்யும். புரிந்தவைகளை தெரியாதவர்களுக்கு சொல்லும் போது மானிடம் விலகி தெய்வம் நம்முள் இருப்பதை நாமும் உணர்ந்து நம்மை நம்பினோரையும் அவரக்குள்ளும் அதே விஷயத்தை உணரவைத்து உன்னதமான வாழ்க்கையை வாழ முடியும்.

எனவே கனவு காண்பது குற்றமல்ல இவ்வுலகில்… யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் இவ்வுலகில்… கனவு கண்டால் தான் மூச்சின் அளவும் குறையும்; பேச்சின் ஆழமும் குறையும். இது இரண்டும் நடந்தால் தான் நம்பிக்கை நம் பக்கம் துணை நிற்கும் முருகனுக்கு வீரபாகு போல.

கனவு காணலாம் சரி. அதை எப்படி காண்பது என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five × three =