May 30 2018 0Comment

அறை  vs அரை 

அறை  vs அரை 

ஆண்டாளிடம்

நான்

இதுவரை

மனதார

வேண்டிய

ஒரே 

விஷயம்

என்று

ஒன்று

உண்டு

மனதார 

சொல்கின்றேன்

என் 

தாயின்

மரணத்திற்கு

முன்

என் 

மரணம்

இருக்க

வேண்டும்…..

காரணம்

என்னை

சுமந்த

அவளை

 

நான்

நால்வரோடு

ஒருவனாக

சுமக்க

முடியாது

தாயாக

அவள்

எனக்கு

செய்ததை

விட 

நான்

இன்று

வரை

அவளுக்கு

செய்து

அவளை

மிஞ்சி

இருப்பேன்

என்ற

கேள்விக்கு

பதில்

கேள்விக்குறி 

தான்??????

எனக்கு

தெரிந்த வரை

என்னை

தெரிந்த

அறிந்த

உள்ளங்களும்

நிச்சயமாக 

இப்படிதான்

இருக்கும்

மாறாக

எனக்கு

தெரிந்த

அறிவாளி

ஒருவன்

இது

நாள்

வரை 

அண்ணன்

வீட்டில்

இருந்த

தன்

அன்னை

கால்

உடைந்து

மனமும்

உடைந்து

பத்து 

நாள்

படுக்க

தன்

இளைய மகன்

வீட்டிற்கு

வந்த போது

அவன்

வருத்தப்பட்டு

சொன்னது

அம்மா

உனக்கு

இடம் 

கொடுக்க

ஆசை

தான்

இருப்பது

2 அறை

அது

எனக்கே

பத்தலை

ஐம்பது

கோடி

சொத்துக்கு

சொந்தக்காரியாக

இருந்தவளுக்கு

இருக்க

ஓரிடம்

கொடுக்க

இயலாத

அயோக்கிய

பயல்களை

பெத்து

போட்ட 

உடன்

இவனை

போன்றவர்கள்

தலையில்

கல்லை

போட்டிருக்கனும்

இவர்களை

போன்றவர்களை

பார்த்தாலே

பாவம்

என்பதால்

தான்

நமக்கு

பிடிக்க

போகும்

பாவம்

போக்க

சென்னையில்

கடலை

வைத்தானா

கடவுள்????

நரசிம்மா

இதுபோன்ற

நவீன

இரண்யகசிபுக்களுக்கு

இன்னும்

எவ்வளவு

நாள் 

இரக்கம்

காட்ட

உத்தேசம்???

வெட்கப்பட

வேண்டிய

வேதனை

இரவை

இன்று

தந்த

ஆண்டவனுக்கு

நன்றி

தாய்க்கு

இடம்

மறுத்த

இந்த

கோடீஸ்வர

மடையனுக்கு

பிறந்த

முட்டாள்

பிள்ளைகள்

நாளை

இவனுக்கு

தேவை

வரும்போது

ஐந்து

நட்சத்திர

ஹோட்டலிலா

அறை

கொடுக்கும்………

அறையை

எதிர்பார்ப்பவனுக்கு

அரை

உண்டு

கடவுளின்

பதிலாக…..

நாளை

என்பது

நரசிம்மனுக்கு

இல்லை

என்பதை

மனபூர்வமாக

நம்பும்

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

15 − ten =